Sunday, May 16, 2010

அடியேன் இயற்றிய பாடல்

 திருச்சிற்றம்பலம் 
முற்றும் கடந்த முன்னவனே
முன்னே தோன்றி முளைத்தவனே
முப்புரம் எரித்த முக்கண்ணனே
முதல்வனே  ஆலவாய் மேவியனே

அழகிய தேரினில் வருபவனே
அழகரின் தங்கையை மணந்தவனே
அடிமுடி அறியா மலையோனே
அம்பொன்னே  ஆலவாய் மேவியனே

தேடியும் காணாத என்னப்பனே
தேனினும் சுவையாய் இருப்பவனே
தேவர்க்கு அமுதினை ஈந்தவனே
தேவனே   ஆலவாய் மேவியனே

கொன்றை மாலை புனைந்தவனே
கொவ்வை செவ்வாய் உடையவனே
கொடுமுடி தரித்த மன்னவனே
கொடி மலர் கூடலில் மேவியனே

வெண்மழு கையினில் பிடித்தவனே
வெண்பொடி உடலில் தரித்தவனே
வெண்மதி சூடிய நின்மலனே
வெள்ளி அம்பலத்திலே மேவியனே
 
புற்றில் நாகம் அணிந்தவனே
கங்கையை சடையிலே முடிந்தவனே 
விடை மேல் ஏறிய வேதியனே
விமலனே ஆலவாய் மேவியனே
 
தக்கனின் வேள்வியை தகர்த்தவனே
காமனை கனலால் விழித்தவனே
நமனை காலால் உதைத்தவனே
ஐயனே ஆலவாய் மேவியனே
 
பிள்ளையின் குரல் கேட்டு வந்தவனே
அவன் தமிழினை வாதினில் காத்தவனே
காழியில் காட்சி தந்தவனே
அழகனே  ஆலவாய் மேவியனே
 
அப்பனின் நாவிலே நின்றவனே
அவன் சூளையை தவிர்த்து வைத்தவனே
அலை கடலில் அவனை காத்தவனே
அப்பனே ஆலவாய் மேவியனே
 
சுந்தரன் பாடிய சுந்தரனே
அவன் பாட்டுக்கு முதல் அடி தந்தவனே
நஞ்சினை அமுதன  உண்டவனே 
அன்பனே ஆலவாய் மேவியனே 

உமையொரு பாகம் அமர்ந்தவனே
உன்பக்தருக்கு அருளினை சுரந்தவனே
உன் திருமுகம் காண விளைந்தேனே
உன் மலரடி நான் சரன்பணிந்தனே. 
திருச்சிற்றம்பலம்