Wednesday, December 30, 2009

பக்தி எப்போது வரும்?

 பக்தி எப்போது வரும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு, காரணம் நான் பெரிய பக்தி மான் ஆனால் எனது மகன் நாத்திகம் பேசுகிறான் அவனுக்கு எப்போது பக்தி வரும் என்று ஏங்குபவர்கள் ஏராளம். பக்தி ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் உதரணமாக நாயன்மார்களை எடுத்க்கொல்லுங்கள்
* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது           நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும்.
* ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை           அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.
* சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே                               சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில்.
ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையிலும் வரலாம் முதுமையிலும் வரலாம் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே அவன் திருவடியை  அடையிந்து விடலாம் .

Monday, December 28, 2009

இறைவனை அடைய ஏழு வழிகள்

திருச்சிற்றம்பலம்



கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் இறைவனை அடைய ஞானத்தையும் , தானத்தையும், யாகத்தையும் நம் மூதாதையர்கள் கையாண்டார்கள். ஆனால் இது அணைத்து கலியுகத்தில் அனைவராலும் செய்ய இயலாது  என்பதால் கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம் என்று கீதையில் கண்ணன் கூறினார்.
அப்படியென்றால் பக்தி செய்வது எப்படி என்ற கேள்வி நம்முள் எழும்???.
தினமும் நாம் கோவி்லில் சென்று  இறைவனை வழிபடுகின்றோம், வீட்டில் பூஜை அறையில்  இறைவனை வழிபடுகின்றோம் அது எல்லாம் பக்தி ஆகாத என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம்!!!
கோவிலிலும் வீட்டிலும் நாம் வேண்டுவது என்ன வென்று நமக்குத்தானே தெரியும்,
அதற்காக நாம் செய்வது பக்தி இல்லை என்று கூறமுடியாது. அதுவும் ஒரு வகையான பக்திதான். ஆனால் அடியனே இங்கு கூறுவது கண்ணபிரான் கீதையில் கூறும் பக்தி. எதையும் எதிர் பார்க்காத பக்தி. குழைந்தை தனமான் பக்தி.( தாய் தன் மகனிடம் கொண்ட பாசத்தை போல)
அந்த பக்தி வளந்தால் தான் நாம் இறைவனை அடையமுடியும். அதற்குரிய வழிமுறைகளை அடியேன் ஏழு படிக்கட்டுகளாக தொகுத்து பதிவிட்டுள்ளேன்.




1.  புண்ணிய தீர்த்தம் செல்லுதல்
2. பாவங்கள் ஓரளவுக்கு விலகுதல்
3. மகான்களின் தொடர்பு  ஏற்படுதல்
4. சத்வ குணம் வளருதல்
5. தர்ம சிந்தனை வளருதல்
6. பக்தி பிறத்தல்
7. பாவம் தொலைதல்

இதில் முதலில் வருவது புண்ணிய தீர்த்தம், புண்ணிய தீர்த்தங்களில்  நீராடினால் நாம் செய்த பாவம் கொஞ்சம் விலகும், பாவம் விலகினால் நமக்கு மகான்களின் தொடர்பும், சித்த புருசர்களின் தொடர்பும் கிடைக்கும். இதன் மூலம் நம் வாழ்கை செம்மையாகும் அதனால் சத்வகுணம் மேலோங்கும். சத்வ குணம் வளர்ந்தால் தர்மசிந்தனை வளரும். தர்மம் செய்ய செய்ய, ஆணவம் இல்லாத அன்பு கலந்த பக்தி(உண்மையான) பிறக்கும்.
'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி என்று சம்மந்த பெருமான் பாடியது போலே.
அப்படி பக்தி பிறந்தால் நம் செய்த பாவங்கள் தொலைந்து ஞானம் கிடைக்கும். அந்த ஞானமாகிய கடலிலே நீங்கள் நித்தியச்சுடரான இறைவனை கண்டு ஆனதாம் அடையலாம்.

ஆகா அனைவரும் சத்வ குணத்தை வளர்பதின் மூலம் பக்தியை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்று என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி  இறைவனை அடைய ஏழு வழிகள் என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.

திருச்சிற்றம்பலம்