Tuesday, November 17, 2009

துர் சொப்பன பரிகாரம்

திருச்சிற்றம்பலம் 


தூங்கும் போது வரும் துர் சொப்பனம் கண்டு நம்மில் சிலர் பயம் கொள்வதுண்டு, அவர்களுக்காகத்தான் இந்த பதிப்பு.
தூங்கும் போது துர் சொப்பனம் வந்தால், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, கிழக்கு முகமாக திரும்பி நின்று, உள்ளங்கையில் ஒரு கரண்டி நெய்யை வைத்து அவர் அவருடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை நினைத்து அந்த நெய்யை உண்டுவிட்டால் அந்த சொப்பனத்தினால் வரும் கெடு பலன் அழிந்து விடும்.


தவறாமல் ஐந்து எழுத்தை ஓதினால் கனவிலும் நினைவிலும்  தீயது தோன்றாது என்பது தமிழ் மறை ஓதிய ஆன்றோர் வாக்கு.


திருச்சிற்றம்பலம்

Saturday, November 14, 2009

பிரதோஷம் மகிமை பகுதி: 2

பிரதோஷம்  மகிமை பகுதி ஒன்ரை  படிக்காதவர்கள் அதை படித்து விட்டு வரவும்.

அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்

ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை  லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும். மனிதனுக்கு  வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.

பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம்  நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே  நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும்  நீங்கும் என்பது சிவ வாக்கு.

புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.

வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.


வெள்ளி  பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு  செல்ல வேண்டும்.

பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால்  அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள்  சனியினால் வரும் துன்பத்தை போக்க  கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.

பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும்  நீங்கும். சிவ அருள் கிட்டும்.


கண்டிபாக செல்ல வேண்டிய  பிரதோஷங்கள் :

வருடத்திருக்கு வரும் 24  பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள்  சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த  8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.

தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.

அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.

பிரதோச மகிமை பகுதி:1

திருச்சிற்றம்பலம் 

கோவிலில் கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் கதை நாம் அறிந்ததே. பொய் கூறியதால் பிரம்மாவிற்கு சிவ அபச்சாரம் எற்பட்டது. இதை போக்க பிரம்மா சிவனை வழிபட பூமியில் தேர்ந்து எடுத்த இடம் தான் திருவண்ணாமலை. அங்கு வந்த பிரம்மா மலையே லிங்க வடிவமாக இருக்கிறதே என்று அதை வளம் வர ஆரம்பித்தார்( திருவண்ணாமலை கிரி வலம் முதலில் வந்தவர் பிரம்மா). இரவு பகல் பாராமல் சிவனை வழிபட்டு கிரி வலம் வந்தார். பல நூறு ஆண்டுகள் கழிந்தன, அவருக்கு சிவ அபச்சாரம் நீங்கவில்லை, கால்கள் தேய்ந்தன அப்படியும் வலம்வந்தார், உடம்பு தேய்ந்தன வெறும் ஊயிருடன் வலம் வந்தார், என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். அப்படி வலம் வந்துகொண்டிருக்கும் போது, ஒருநாள் அசரிரி ஓலித்தது ' ஹே பிரம்மா ஏன் இவ்வளவு கஷ்ட படுகிறாய் நாளை சனி மஹா பிரதோஷம் நீ விரதம் இருந்து சிவனை வணங்கினால் உன் தோஷம் தீரும் என்று கூறியது '. அவ்வாறே வழிபட்ட பிரம்மாவிர்க்கு  சிவ அபச்சாரம் நீங்கியது. அதேபோல் தேவாதி தேவர்கள் பாற்கடல் கடைந்த போது சிவ அபச்சாரத்திற்கு உள்ளானார்கள், அதை போக்க பிரதோச தினத்தில்(திரயோதசி திதி) சிவனை வழிபட்டார்கள்  

சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருத படும் பிரதோஷம் தினத்தில் சிவ ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் நாம் எல்லை இல்லா பலன் பெறலாம்.
நாம் செய்த பாவங்களை  நீக்க  கூடிய நாள் பிரதோஷம். பிறர் தோசத்தை நீக்க கூடிய நாள் ஆகியதால் அதற்கு பிரதோஷம் என்று பெயர் வந்தது.

பிரதோஷ மகிமை பகுதி:3

பிரதோஷம்  மகிமை பகுதி1,  பிரதோஷம்  மகிமை பகுதி 2 படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இப்பகுதிக்கு வரவும்.

பகுதி ஒன்றிலும், இரண்டிலும் பிரதோஷத்தை பற்றி பார்த்தோம். இப்போது பிரதோச நேரத்தை பற்றி பார்போம்.

பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் வரும் திதி த்ரயோதசி திதியாகும். அந்த திதி வரும் நாளை தான் நாம் பிரதோஷம் என்று அழைப்போம்.ஆக ஒரு மாதத்திருக்கு தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என்று இரண்டு வரும். ஒரு வருடத்திற்கு 24  பிரதோஷம் வரும். 
அதிலும் குறிப்பாக 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் ஆகும். இது த்ரயோதசி திதி அல்லாத நாட்களிலும் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் நேரமாகவே கருத படுகிறது. இந்த இடை பட்ட நேரத்தில் நாம் எத்தையும் உண்ணாமல் பஞ்சாக்ஷரமும்  பன்னிரு திருமுறைகளும் ஓத  வேண்டும்.  

ஞானிகளும் ரிஷிகளும்  பிரதோச விரதத்தை கடை பிடித்து சிவபாதம் அடைந்தார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோச விரதத்தை முறை படி கடை பிடித்து, உங்கள் ஜன்ம பாவங்களை போக்கி, இறை அருள் பெருக.


என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி  பிரதோஷம்  மகிமை என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.

திருச்சிற்றம்பலம்

Monday, November 9, 2009

யார் பாடியது தேவாரம் ?

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடபற்றவை மூவர் தேவாரம் என்று நாம் பெரியோர்கள் சொல்ல கேட்டு இருப்போம். அதற்கு பிற்பாடு மாணிக்கவாச சுவாமிகளின் திருவாசகத்தையும் சேர்த்து நால்வர் தேவாரம் என்று அழைக்க பட்டது. ஆனால் உண்மையில் யார்  பாடியது தேவாரம் என்று அறியத்தானே இந்த தொகுப்பு!

சம்பந்தர் பாடியதன் பெயர் :- திரு கடைகாப்பு 
சுந்தரர் பாடியதன் பெயர்    :- திரு பாட்டு
மாணிக்கவாசகர்                 :-  திரு வாசகம் (யாவரும் அறிந்த ஒன்றே)

அப்பர் என்று சம்பந்தரால் அன்போடு அழைக்கப்பட்ட நாவுக்கு அரசராக விளங்கிய நாவுக்கரச பெருமான் பாடிய பாடல்களின் தொகுபே தேவாரமாகும். 

இதை பறைசாற்றும்வகையில் சிவபெருமான்,
சம்பந்தன் தன்னை பாடினான்,
சுந்தரர் பொன்னை பாடினான்,
மனிச்கவசகர் ஞானத்தை பாடினான்,
நாவுக்கசர் என்று என்னால் பெயர் சூட்ற பெற்ற அப்பரோ என்னை பாடினான் என்றார் .
அதனால் தானோ என்னவோ நம் பெரியோர்கள் நாவுக்கசர் பாடியது தான் தேவாரம் என்று எழுதி வைத்தார்கள். இந்த அறிய தகவல் அனைவர்க்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை அடியேன் பதிவிடுகின்றேன்.

Thursday, November 5, 2009

திருமுறைகளை ஓதுபவர்கள் திருச்சிற்றம்பலம் கூறுவதின் பொருள்

  பொதுவாக திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று கூறுவது மரபு , அதன் பொருள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.
சைவத் திருமுறைகளை(தேவார ஏடுகளை) என் அப்பன் ஆடும் பொன்னம்பலத்திலே அதாவது சிதம்பரம் கோவிலிலே தான் சிறிது காலம் பாதுகாத்து உபசரித்து வைத்திருந்தார்கள். இந்த புண்ணியஸ்தலம் தான் இசை உலகிற்கே பிறப்பிடம் என்பதால். அதை போற்றும் வகையில் திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்.

நமசிவாயத்தின் பொருள்

ந     - திரோத மலம்
ம    - ஆணவ மலம்
சி    - சிவம்
வா - திருவருள்
ய    - ஆன்மா
'ய' காரமான  'ஆன்மா'
'ந'  காரமான  'திரோத மலத்தினலே' 
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற  'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்