பக்தி எப்போது வரும்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு உண்டு, காரணம் நான் பெரிய பக்தி மான் ஆனால் எனது மகன் நாத்திகம் பேசுகிறான் அவனுக்கு எப்போது பக்தி வரும் என்று ஏங்குபவர்கள் ஏராளம். பக்தி ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம் உதரணமாக நாயன்மார்களை எடுத்க்கொல்லுங்கள்
* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும்.
* ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார்.
* சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில்.
ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையிலும் வரலாம் முதுமையிலும் வரலாம் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே அவன் திருவடியை அடையிந்து விடலாம் .
Wednesday, December 30, 2009
Monday, December 28, 2009
இறைவனை அடைய ஏழு வழிகள்
திருச்சிற்றம்பலம்
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் இறைவனை அடைய ஞானத்தையும் , தானத்தையும், யாகத்தையும் நம் மூதாதையர்கள் கையாண்டார்கள். ஆனால் இது அணைத்து கலியுகத்தில் அனைவராலும் செய்ய இயலாது என்பதால் கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம் என்று கீதையில் கண்ணன் கூறினார்.
அப்படியென்றால் பக்தி செய்வது எப்படி என்ற கேள்வி நம்முள் எழும்???.
தினமும் நாம் கோவி்லில் சென்று இறைவனை வழிபடுகின்றோம், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடுகின்றோம் அது எல்லாம் பக்தி ஆகாத என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம்!!!
கோவிலிலும் வீட்டிலும் நாம் வேண்டுவது என்ன வென்று நமக்குத்தானே தெரியும்,
அதற்காக நாம் செய்வது பக்தி இல்லை என்று கூறமுடியாது. அதுவும் ஒரு வகையான பக்திதான். ஆனால் அடியனே இங்கு கூறுவது கண்ணபிரான் கீதையில் கூறும் பக்தி. எதையும் எதிர் பார்க்காத பக்தி. குழைந்தை தனமான் பக்தி.( தாய் தன் மகனிடம் கொண்ட பாசத்தை போல)
அந்த பக்தி வளந்தால் தான் நாம் இறைவனை அடையமுடியும். அதற்குரிய வழிமுறைகளை அடியேன் ஏழு படிக்கட்டுகளாக தொகுத்து பதிவிட்டுள்ளேன்.

1. புண்ணிய தீர்த்தம் செல்லுதல்
2. பாவங்கள் ஓரளவுக்கு விலகுதல்
3. மகான்களின் தொடர்பு ஏற்படுதல்
4. சத்வ குணம் வளருதல்
5. தர்ம சிந்தனை வளருதல்
6. பக்தி பிறத்தல்
7. பாவம் தொலைதல்
இதில் முதலில் வருவது புண்ணிய தீர்த்தம், புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவம் கொஞ்சம் விலகும், பாவம் விலகினால் நமக்கு மகான்களின் தொடர்பும், சித்த புருசர்களின் தொடர்பும் கிடைக்கும். இதன் மூலம் நம் வாழ்கை செம்மையாகும் அதனால் சத்வகுணம் மேலோங்கும். சத்வ குணம் வளர்ந்தால் தர்மசிந்தனை வளரும். தர்மம் செய்ய செய்ய, ஆணவம் இல்லாத அன்பு கலந்த பக்தி(உண்மையான) பிறக்கும்.
'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' என்று சம்மந்த பெருமான் பாடியது போலே.
அப்படி பக்தி பிறந்தால் நம் செய்த பாவங்கள் தொலைந்து ஞானம் கிடைக்கும். அந்த ஞானமாகிய கடலிலே நீங்கள் நித்தியச்சுடரான இறைவனை கண்டு ஆனதாம் அடையலாம்.
ஆகா அனைவரும் சத்வ குணத்தை வளர்பதின் மூலம் பக்தியை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்று என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி இறைவனை அடைய ஏழு வழிகள் என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் ஆகிய மூன்று யுகங்களிலும் இறைவனை அடைய ஞானத்தையும் , தானத்தையும், யாகத்தையும் நம் மூதாதையர்கள் கையாண்டார்கள். ஆனால் இது அணைத்து கலியுகத்தில் அனைவராலும் செய்ய இயலாது என்பதால் கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம் என்று கீதையில் கண்ணன் கூறினார்.
அப்படியென்றால் பக்தி செய்வது எப்படி என்ற கேள்வி நம்முள் எழும்???.
தினமும் நாம் கோவி்லில் சென்று இறைவனை வழிபடுகின்றோம், வீட்டில் பூஜை அறையில் இறைவனை வழிபடுகின்றோம் அது எல்லாம் பக்தி ஆகாத என்ற எண்ணம் உங்கள் மனதில் எழலாம்!!!
கோவிலிலும் வீட்டிலும் நாம் வேண்டுவது என்ன வென்று நமக்குத்தானே தெரியும்,
அதற்காக நாம் செய்வது பக்தி இல்லை என்று கூறமுடியாது. அதுவும் ஒரு வகையான பக்திதான். ஆனால் அடியனே இங்கு கூறுவது கண்ணபிரான் கீதையில் கூறும் பக்தி. எதையும் எதிர் பார்க்காத பக்தி. குழைந்தை தனமான் பக்தி.( தாய் தன் மகனிடம் கொண்ட பாசத்தை போல)
அந்த பக்தி வளந்தால் தான் நாம் இறைவனை அடையமுடியும். அதற்குரிய வழிமுறைகளை அடியேன் ஏழு படிக்கட்டுகளாக தொகுத்து பதிவிட்டுள்ளேன்.

1. புண்ணிய தீர்த்தம் செல்லுதல்
2. பாவங்கள் ஓரளவுக்கு விலகுதல்
3. மகான்களின் தொடர்பு ஏற்படுதல்
4. சத்வ குணம் வளருதல்
5. தர்ம சிந்தனை வளருதல்
6. பக்தி பிறத்தல்
7. பாவம் தொலைதல்
இதில் முதலில் வருவது புண்ணிய தீர்த்தம், புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் நாம் செய்த பாவம் கொஞ்சம் விலகும், பாவம் விலகினால் நமக்கு மகான்களின் தொடர்பும், சித்த புருசர்களின் தொடர்பும் கிடைக்கும். இதன் மூலம் நம் வாழ்கை செம்மையாகும் அதனால் சத்வகுணம் மேலோங்கும். சத்வ குணம் வளர்ந்தால் தர்மசிந்தனை வளரும். தர்மம் செய்ய செய்ய, ஆணவம் இல்லாத அன்பு கலந்த பக்தி(உண்மையான) பிறக்கும்.
'காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி' என்று சம்மந்த பெருமான் பாடியது போலே.
அப்படி பக்தி பிறந்தால் நம் செய்த பாவங்கள் தொலைந்து ஞானம் கிடைக்கும். அந்த ஞானமாகிய கடலிலே நீங்கள் நித்தியச்சுடரான இறைவனை கண்டு ஆனதாம் அடையலாம்.
ஆகா அனைவரும் சத்வ குணத்தை வளர்பதின் மூலம் பக்தியை அடைந்து இறைவனை அடைய வேண்டும் என்று என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி இறைவனை அடைய ஏழு வழிகள் என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
Tuesday, November 17, 2009
துர் சொப்பன பரிகாரம்
திருச்சிற்றம்பலம்
தூங்கும் போது வரும் துர் சொப்பனம் கண்டு நம்மில் சிலர் பயம் கொள்வதுண்டு, அவர்களுக்காகத்தான் இந்த பதிப்பு.
தூங்கும் போது துர் சொப்பனம் வந்தால், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, கிழக்கு முகமாக திரும்பி நின்று, உள்ளங்கையில் ஒரு கரண்டி நெய்யை வைத்து அவர் அவருடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை நினைத்து அந்த நெய்யை உண்டுவிட்டால் அந்த சொப்பனத்தினால் வரும் கெடு பலன் அழிந்து விடும்.
தவறாமல் ஐந்து எழுத்தை ஓதினால் கனவிலும் நினைவிலும் தீயது தோன்றாது என்பது தமிழ் மறை ஓதிய ஆன்றோர் வாக்கு.
திருச்சிற்றம்பலம்
Saturday, November 14, 2009
பிரதோஷம் மகிமை பகுதி: 2
பிரதோஷம் மகிமை பகுதி ஒன்ரை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு வரவும்.
அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்
ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.
அந்த அந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தின் பலன் என்ன என்று பார்போம்
ஞாயிறு பிரதோஷம்:
சூரிய திசை நடப்பவர்கள் கண்டிபாக ஞாயிறு அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
இதனால் சூரிய பகவன் அருள் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும்.பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம்:
பிரதோஷத்தில் ஸோமவரம்(திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது
சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் திங்கள் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.
செவ்வாய் பிரதோஷம்:
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். மனிதனுக்கு வரும் ரூனம் மற்றும் ரணத்தை நீக்க கூடிய பிரதோஷம் இது.
பலன்:
செவ்வாயால் வரும் கெடு பலன் நீங்கும்.பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நக்ஷத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே நீராடி வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருனமும் , ரணமும் நீங்கும் என்பது சிவ வாக்கு.
புதன் பிரதோஷம்:
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
புதனால் வரும் கெடு பலன் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாமல் புதன் அன்று வரும் பிரதோசத்திற்கு அழைத்து செல்ல வேண்டும், இதனால் அவர்கள் கல்வி சிறக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.
வியாழன் பிரதோஷம்:
குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வியாழன் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும்.
வெள்ளி பிரதோஷம்:
சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
உறவு வளப்படும் . சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
சனி மஹா பிரதோஷம்:
சனி பிரதோஷம் என்று கூரமட்டர்கள், சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
பலன்:
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும்.
கரக தோசத்தால் ஏற்படும் தீமை குரையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவ அருள் கிட்டும்.
கண்டிபாக செல்ல வேண்டிய பிரதோஷங்கள் :
வருடத்திருக்கு வரும் 24 பிரதோஷத்திற்கு போக முடியாதவர்கள் சித்திரை ,வைகாசி, ஐப்பசி , கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷத்திற்காவது செல்ல வேண்டும், இந்த 8 பிரதோஷத்திற்கு சென்றால் ஒரு வருடம் பிரதோஷத்திற்கு சென்ற பலன் கிடைக்கும்.
தேய்பிறையில் வரும் சனி பிரதோஷம் :- மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அவர் அவர் நக்ஷத்திரம் அன்று வரும் பிரதோஷம் :- கவலை தீரும்.
பிரதோச மகிமை பகுதி:1
திருச்சிற்றம்பலம்
கோவிலில் கருவறைக்கு பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் கதை நாம் அறிந்ததே. பொய் கூறியதால் பிரம்மாவிற்கு சிவ அபச்சாரம் எற்பட்டது. இதை போக்க பிரம்மா சிவனை வழிபட பூமியில் தேர்ந்து எடுத்த இடம் தான் திருவண்ணாமலை. அங்கு வந்த பிரம்மா மலையே லிங்க வடிவமாக இருக்கிறதே என்று அதை வளம் வர ஆரம்பித்தார்( திருவண்ணாமலை கிரி வலம் முதலில் வந்தவர் பிரம்மா). இரவு பகல் பாராமல் சிவனை வழிபட்டு கிரி வலம் வந்தார். பல நூறு ஆண்டுகள் கழிந்தன, அவருக்கு சிவ அபச்சாரம் நீங்கவில்லை, கால்கள் தேய்ந்தன அப்படியும் வலம்வந்தார், உடம்பு தேய்ந்தன வெறும் ஊயிருடன் வலம் வந்தார், என்று நம் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். அப்படி வலம் வந்துகொண்டிருக்கும் போது, ஒருநாள் அசரிரி ஓலித்தது ' ஹே பிரம்மா ஏன் இவ்வளவு கஷ்ட படுகிறாய் நாளை சனி மஹா பிரதோஷம் நீ விரதம் இருந்து சிவனை வணங்கினால் உன் தோஷம் தீரும் என்று கூறியது '. அவ்வாறே வழிபட்ட பிரம்மாவிர்க்கு சிவ அபச்சாரம் நீங்கியது. அதேபோல் தேவாதி தேவர்கள் பாற்கடல் கடைந்த போது சிவ அபச்சாரத்திற்கு உள்ளானார்கள், அதை போக்க பிரதோச தினத்தில்(திரயோதசி திதி) சிவனை வழிபட்டார்கள்
சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருத படும் பிரதோஷம் தினத்தில் சிவ ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் நாம் எல்லை இல்லா பலன் பெறலாம்.
நாம் செய்த பாவங்களை நீக்க கூடிய நாள் பிரதோஷம். பிறர் தோசத்தை நீக்க கூடிய நாள் ஆகியதால் அதற்கு பிரதோஷம் என்று பெயர் வந்தது.
பிரதோஷ மகிமை பகுதி:3
பிரதோஷம் மகிமை பகுதி1, பிரதோஷம் மகிமை பகுதி 2 படிக்காதவர்கள் அதை படித்துவிட்டு இப்பகுதிக்கு வரவும்.
பகுதி ஒன்றிலும், இரண்டிலும் பிரதோஷத்தை பற்றி பார்த்தோம். இப்போது பிரதோச நேரத்தை பற்றி பார்போம்.
பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் வரும் திதி த்ரயோதசி திதியாகும். அந்த திதி வரும் நாளை தான் நாம் பிரதோஷம் என்று அழைப்போம்.ஆக ஒரு மாதத்திருக்கு தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என்று இரண்டு வரும். ஒரு வருடத்திற்கு 24 பிரதோஷம் வரும்.
அதிலும் குறிப்பாக 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் ஆகும். இது த்ரயோதசி திதி அல்லாத நாட்களிலும் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் நேரமாகவே கருத படுகிறது. இந்த இடை பட்ட நேரத்தில் நாம் எத்தையும் உண்ணாமல் பஞ்சாக்ஷரமும் பன்னிரு திருமுறைகளும் ஓத வேண்டும்.
ஞானிகளும் ரிஷிகளும் பிரதோச விரதத்தை கடை பிடித்து சிவபாதம் அடைந்தார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோச விரதத்தை முறை படி கடை பிடித்து, உங்கள் ஜன்ம பாவங்களை போக்கி, இறை அருள் பெருக.
என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி பிரதோஷம் மகிமை என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
பகுதி ஒன்றிலும், இரண்டிலும் பிரதோஷத்தை பற்றி பார்த்தோம். இப்போது பிரதோச நேரத்தை பற்றி பார்போம்.
பௌர்ணமிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் அமாவாசைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பும் வரும் திதி த்ரயோதசி திதியாகும். அந்த திதி வரும் நாளை தான் நாம் பிரதோஷம் என்று அழைப்போம்.ஆக ஒரு மாதத்திருக்கு தேய்பிறை பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம் என்று இரண்டு வரும். ஒரு வருடத்திற்கு 24 பிரதோஷம் வரும்.
அதிலும் குறிப்பாக 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் ஆகும். இது த்ரயோதசி திதி அல்லாத நாட்களிலும் 4.30 மணியில் இருந்து 6 மணிக்கான இடைப்பட்ட நேரம் பிரதோஷம் நேரமாகவே கருத படுகிறது. இந்த இடை பட்ட நேரத்தில் நாம் எத்தையும் உண்ணாமல் பஞ்சாக்ஷரமும் பன்னிரு திருமுறைகளும் ஓத வேண்டும்.
ஞானிகளும் ரிஷிகளும் பிரதோச விரதத்தை கடை பிடித்து சிவபாதம் அடைந்தார்கள்.
அவ்வளவு சிறப்பு வாய்ந்த பிரதோச விரதத்தை முறை படி கடை பிடித்து, உங்கள் ஜன்ம பாவங்களை போக்கி, இறை அருள் பெருக.
என் தாய் மீனாக்ஷியையும் என் அப்பன் சொக்கனையும் வணங்கி பிரதோஷம் மகிமை என்னும் இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
திருச்சிற்றம்பலம்
Monday, November 9, 2009
யார் பாடியது தேவாரம் ?
சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடபற்றவை மூவர் தேவாரம் என்று நாம் பெரியோர்கள் சொல்ல கேட்டு இருப்போம். அதற்கு பிற்பாடு மாணிக்கவாச சுவாமிகளின் திருவாசகத்தையும் சேர்த்து நால்வர் தேவாரம் என்று அழைக்க பட்டது. ஆனால் உண்மையில் யார் பாடியது தேவாரம் என்று அறியத்தானே இந்த தொகுப்பு!
சம்பந்தர் பாடியதன் பெயர் :- திரு கடைகாப்பு
சுந்தரர் பாடியதன் பெயர் :- திரு பாட்டு
மாணிக்கவாசகர் :- திரு வாசகம் (யாவரும் அறிந்த ஒன்றே)
அப்பர் என்று சம்பந்தரால் அன்போடு அழைக்கப்பட்ட நாவுக்கு அரசராக விளங்கிய நாவுக்கரச பெருமான் பாடிய பாடல்களின் தொகுபே தேவாரமாகும்.
இதை பறைசாற்றும்வகையில் சிவபெருமான்,
சம்பந்தன் தன்னை பாடினான்,
சுந்தரர் பொன்னை பாடினான்,
மனிச்கவசகர் ஞானத்தை பாடினான்,
நாவுக்கசர் என்று என்னால் பெயர் சூட்ற பெற்ற அப்பரோ என்னை பாடினான் என்றார் .
அதனால் தானோ என்னவோ நம் பெரியோர்கள் நாவுக்கசர் பாடியது தான் தேவாரம் என்று எழுதி வைத்தார்கள். இந்த அறிய தகவல் அனைவர்க்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை அடியேன் பதிவிடுகின்றேன்.
சம்பந்தர் பாடியதன் பெயர் :- திரு கடைகாப்பு
சுந்தரர் பாடியதன் பெயர் :- திரு பாட்டு
மாணிக்கவாசகர் :- திரு வாசகம் (யாவரும் அறிந்த ஒன்றே)
அப்பர் என்று சம்பந்தரால் அன்போடு அழைக்கப்பட்ட நாவுக்கு அரசராக விளங்கிய நாவுக்கரச பெருமான் பாடிய பாடல்களின் தொகுபே தேவாரமாகும்.
இதை பறைசாற்றும்வகையில் சிவபெருமான்,
சம்பந்தன் தன்னை பாடினான்,
சுந்தரர் பொன்னை பாடினான்,
மனிச்கவசகர் ஞானத்தை பாடினான்,
நாவுக்கசர் என்று என்னால் பெயர் சூட்ற பெற்ற அப்பரோ என்னை பாடினான் என்றார் .
அதனால் தானோ என்னவோ நம் பெரியோர்கள் நாவுக்கசர் பாடியது தான் தேவாரம் என்று எழுதி வைத்தார்கள். இந்த அறிய தகவல் அனைவர்க்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கில் இதை அடியேன் பதிவிடுகின்றேன்.
Thursday, November 5, 2009
திருமுறைகளை ஓதுபவர்கள் திருச்சிற்றம்பலம் கூறுவதின் பொருள்
பொதுவாக திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று கூறுவது மரபு , அதன் பொருள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.
சைவத் திருமுறைகளை(தேவார ஏடுகளை) என் அப்பன் ஆடும் பொன்னம்பலத்திலே அதாவது சிதம்பரம் கோவிலிலே தான் சிறிது காலம் பாதுகாத்து உபசரித்து வைத்திருந்தார்கள். இந்த புண்ணியஸ்தலம் தான் இசை உலகிற்கே பிறப்பிடம் என்பதால். அதை போற்றும் வகையில் திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்.
சைவத் திருமுறைகளை(தேவார ஏடுகளை) என் அப்பன் ஆடும் பொன்னம்பலத்திலே அதாவது சிதம்பரம் கோவிலிலே தான் சிறிது காலம் பாதுகாத்து உபசரித்து வைத்திருந்தார்கள். இந்த புண்ணியஸ்தலம் தான் இசை உலகிற்கே பிறப்பிடம் என்பதால். அதை போற்றும் வகையில் திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்.
நமசிவாயத்தின் பொருள்
ந - திரோத மலம்
ம - ஆணவ மலம்
சி - சிவம்
வா - திருவருள்
ய - ஆன்மா
'ய' காரமான 'ஆன்மா'
'ந' காரமான 'திரோத மலத்தினலே'
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற 'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்
ம - ஆணவ மலம்
சி - சிவம்
வா - திருவருள்
ய - ஆன்மா
'ய' காரமான 'ஆன்மா'
'ந' காரமான 'திரோத மலத்தினலே'
'ம' காரமான ' ஆணவ மலத்தை' அழித்து
'வா' என்ற 'திருவருள்' துணை கொண்டு
சிவத்தை அடைய வேண்டும்
Saturday, October 10, 2009
Madurai Meenakshi Amman Temple
திருச்சிற்றம்பலம்
பிறந்த குழந்தை முதலில் அம்மா என்று அழைக்கும் , அதுபோல அடியனும் என் அம்மை அப்பனை பற்றி முதலில் கூறுவதில் பெருமை கொள்கிறேன். அடியேன் பிறந்த ஊரான திரு ஆலவாயில் இருந்து எனது பதிப்பை
தொடங்குகி்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் பாடல் பெற்ற சிவஸ்தலமாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்.
ஆலவாய் பெயர் காரணம்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
ஸ்தல புராணம்
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியணின் கனவில் தோன்றிய சிவ பெருமான் தான் கடம்ப வனத்திலே, கடம்ப மரத்தடியில் ஒரு சுயம்பு லிங்கமாக தோன்றியிருபதாக கூறி தனக்கு அங்கு ஒரு கோவில் கட்டும் படியும் ஆணையிட்டார். காலை துயில் எழுந்த குலசேகர பாண்டியன் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து, இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன., விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலின் தல விருட்சம் : கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரை குளம், மற்றும் வைகை.
புதன் ஸ்தலம் :
நவக்கிரங்களில் புதனுக்குரிய பரிகார ஸ்தலமாக இக் கோவில் விளங்குகிறது.
புதன் கிழமை இங்கு வந்து 54 நெய் தீபம் ஏற்றி மீனாக்ஷி சொக்கநாதரை வழிபட்டால் புதன் திசையால் வரும் தோஷம் நீங்கும்.
குறிப்பாக சித்திரை மாதம் வரும் புதன் கிழமை இங்கு வந்து வழிபட்டால் தோஷம் உடனே நிவர்த்தியாகும்.
வெள்ளியம்பலம் :
பிறந்த குழந்தை முதலில் அம்மா என்று அழைக்கும் , அதுபோல அடியனும் என் அம்மை அப்பனை பற்றி முதலில் கூறுவதில் பெருமை கொள்கிறேன். அடியேன் பிறந்த ஊரான திரு ஆலவாயில் இருந்து எனது பதிப்பை
தொடங்குகி்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள பல சிறந்த கோவில்களில் ஒன்றாகவும், பெரிய திருக்கோவில்களில் முதன்மைச் சிறப்பு உடையதாகவும் பாடல் பெற்ற சிவஸ்தலமாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயமாகும்.
ஆலவாய் பெயர் காரணம்
சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக்கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. மதுரையை அழிக்க வருணன ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.
ஸ்தல புராணம்
மதுரையை ஆண்ட குலசேகர பாண்டியணின் கனவில் தோன்றிய சிவ பெருமான் தான் கடம்ப வனத்திலே, கடம்ப மரத்தடியில் ஒரு சுயம்பு லிங்கமாக தோன்றியிருபதாக கூறி தனக்கு அங்கு ஒரு கோவில் கட்டும் படியும் ஆணையிட்டார். காலை துயில் எழுந்த குலசேகர பாண்டியன் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து, இந்த கோவிலையும், பின் நகரத்தையும் நிர்மாணித்ததாக வரலாறு. இந்த சிவலிங்கம் பிற தலங்களாகிய மேருமலை, வெள்ளிமலை, திருக்கேதாரம், வாரணாசி மற்றும் பல பெருமை பெற்ற தலங்கள் எல்லாவற்றிலும் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றிற்கும் முன்னே தோன்றியதாகும். எனவே இதற்கு மூலலிங்கம் என்ற பெயரும் உண்டு. இதனை திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டக தேவாரப் பாடலில் குறிப்பிடுகிறார்.
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி
முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்
வளைத்தானை வல்லசுரர் புரங்கள் மூன்றும்
வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்
துளைத்தானைச் சுடுசரத்தாற் றுவள நீறாத்
தூமுத்த வெண்முறுவல் உமையோ டாடித்
திளைத்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அவன் பெயரிலேயே இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன., விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
இக்கோவிலின் தல விருட்சம் : கடம்ப மரம்
தீர்த்தம் : பொற்றாமரை குளம், மற்றும் வைகை.
புதன் ஸ்தலம் :
நவக்கிரங்களில் புதனுக்குரிய பரிகார ஸ்தலமாக இக் கோவில் விளங்குகிறது.
புதன் கிழமை இங்கு வந்து 54 நெய் தீபம் ஏற்றி மீனாக்ஷி சொக்கநாதரை வழிபட்டால் புதன் திசையால் வரும் தோஷம் நீங்கும்.
குறிப்பாக சித்திரை மாதம் வரும் புதன் கிழமை இங்கு வந்து வழிபட்டால் தோஷம் உடனே நிவர்த்தியாகும்.
வெள்ளியம்பலம் :
நடராஜ பெருமானின் 5 சபைகளில் ஒன்றாக இத்தலம் விளங்குகின்றது. மீனாட்சி, சுந்தரேஸ்வரரின் திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் என பலரும் மதுரைக்கு வந்தனர். இவர்களில் வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய மகரிஷிகளும் அடக்கம். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு விருந்து பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மட்டும் சாப்பிடவில்லை. இவ்விருவரும் சிதம்பரத்தில் நடராஜரின் நடனம் கண்டு உண்ணும் வழக்கமுடையவர்கள். அவர்களை மணவீட்டார் சாப்பிட அழைத்தனர்.
தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.
ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம். பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.
சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
சக்தி பீடம்:
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு:
எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.
மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
மீனாக்ஷி சந்நிதி:
அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்
சொக்கன் சந்நிதி:
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.
திருச்சிற்றம்பலம்
தாங்கள் சிவதாண்டவம் கண்டபின்பே சாப்பிடுவோம் என்றனர் இருவரும். அதைக்கேட்ட சிவன், மகரிஷிகளுக்காக இங்கு ஆனந்த தாண்டவம் ஆடிக்காட்டினார். இதைப் பார்த்த பிறகே மகரிஷிகள் சாப்பிட்டனர். பிற்காலத்தில் மதுரையை ராஜசேகர பாண்டிய மன்னன் ஆண்டான். சிவபக்தனான அவன் ஆயகலைகளில், 63 ஐ கற்றுத்தேர்ந்தான். பரதம் மட்டும் பாக்கியிருந்தது. ஒரு சமயம் அவன் மற்றொரு மன்னனுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலை வந்தது. எனவே, பரதம் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படவே, அதைக் கற்றான். முதல் நாள் பயிற்சி எடுத்த மன்னனுக்கு, காலில் கடும் வலி உண்டானது. அப்போதுதான் அவனுக்கு சுள்ளென ஓர் உண்மை உரைத்தது.
ஆஹா! பரதம் கற்க இன்று ஒருநாள் ஆடிய நமக்கே இப்படி வலிக்கிறதே! இங்கே எம்பெருமான் தொடர்ந்து ஒரே காலை மட்டும் ஊன்றியல்லவா ஆடிக்கொண்டிருக்கிறார்? அவருக்கு எவ்வளவு வலி இருக்கும்?” என நினைத்தவன், நடராஜர் சன்னதிக்குச் சென்றான்.
பகவானே! உன் கால் வலிக்குமே! காலை மாற்றி ஆடு!” என வேண்டினான். பக்தனின் வேண்டுதலை ஏற்ற சிவன், அவனுக்காக இடக்காலை ஊன்றி, வலது காலை தூக்கி ஆடினார். இவர் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்புள்ள மகாமண்டபத்தில் கால் மாற்றி ஆடிய கோலத்தில் காட்சி தருகிறார். வியாக்ரபாதர், பதஞ்சலிக்காக ஆடிய ஆனந்த தாண்டவமும், மன்னனுக்காக கால் மாற்றி ஆடிய தாண்டவமும் நடராஜர் சன்னதி எதிரேயுள்ள சுவரில் சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
சிவன் பாதம் பார்க்க வேண்டுமா: சிவபெருமானின் இடப்பகுதி, அம்பாளின் அம்சமாகும். எனவே சிவனின் இடக்கால் அம்பிகைக்குரியது ஆகிறது. பொதுவாக கோயில்களில் நடராஜர், இடது காலை தூக்கித்தான் ஆடிய கோலத்தில் இருப்பார். எனவே, அவரது தூக்கிய திருவடியை அம்பாள் பாதமாகவே கருதுவர். ஆனால், இக்கோயிலில் வலதுகாலை தூக்கி ஆடிய கோலத்தில் இருப்பதால், இந்த பாதத்தை சிவனின் பாதமாக கருதுகின்றனர். சிவத்தலங்களில் இங்கு மட்டுமே சிவனின் பாதத்தை தரிசிக்கலாம் என்பது விசேஷம். பஞ்ச சபைகளிலுள்ள நடராஜர்களில் மதுரையிலுள்ள வெள்ளியம்பல நடராஜரே பெரிய மூர்த்தியாவார். சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி தலங்களில் சிறிய மூர்த்தியாக பஞ்சலோக விக்ரகமாகவும், குற்றாலத்தில் ஓவிய வடிவிலும்
இருக்கிறார். இங்கு மட்டும் சிலாவிக்ரகமாக, பெரிய வடிவில் காட்சி தருகிறார். இவர், பத்து கரங்களுடன் ஆயுதம் ஏந்தி காட்சி தருவது விசேஷம். அருகில் சிவகாமி அம்மை இருக்கிறாள்.
சபை முழுக்க வெள்ளியால் உருவாக்கப்பட்டுள்ளது. தனி வாசலும் இருக்கிறது. முன்புறம் வியாக்ரபாதரும், பதஞ்சலி மகரிஷியும் வணங்கியபடி இருக்கின்றனர். உற்சவ நடராஜர் அருகில் இருக்கிறார். இவரது சன்னதி எதிரே நின்று சுந்தரேஸ்வரரையும், நடராஜரையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம்.
சக்தி பீடம்:
64 சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவிலாகும். இத்தலத்தில் மீனாக்ஷி அம்மன் சந்நிதியே முதன்மை பெற்றது. ஆகையால் இத்தலத்தில் முதலில் மீனாட்சியை வணங்கி விட்டே பிறகு சுந்தரேஸ்வரர் சந்நிதி சென்று அவரை வழிபடுவது மரபாக இருந்து வருகிறது.
கோவில் அமைப்பு:
எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடைய இத்திருக்கோவில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். இக்கோவிலின் ஆடி வீதியில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் வானளாவி காட்சி தருகின்றன. இவற்றுள் 160 அடி உயரமுள்ள தெற்கு கோபுரம் மற்ற கோபுரங்களை விட உயரமானது. கிழக்கு கோபுரத்தின் உயரம் 153 அடி. வடக்கு கோபுரத்தைத் தவிர மற்ற மூன்று கோபுரங்களிலும் பல அற்புதமான சுதை சிற்பங்களைக் காணலாம்.
மீனாக்ஷி அம்மன் சந்நிதியின் முன்பகுதியாக அஷ்டசக்தி மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாக்ஷி கல்யாணம் சுதை வடிவில் காட்சி அளிக்கிறது. உள்ளே மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் எட்டு சக்தியின் வடிவங்கள் அழகுற அமைந்துள்ளன.
மீனாக்ஷி சந்நிதி:
அடுத்து உள்ள மீனாக்ஷி நாயக்கண் மண்டபத்தைத் தாண்டி உள்ளே சென்றால் இத்தலத்தின் இறைவி மீனாக்ஷி அம்மையின் சந்நிதி இருக்கிறது. கருவறையில் அம்மை இரண்டு திருக்கரங்களுடன் ஒரு கையில் கிளியை ஏந்தி அருட்காட்சி தருகிறாள். இங்குள்ள மீனாட்சி அம்மன் விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. அம்மனுக்கு மரகதவல்லி என்றே ஒரு பெயர். மேலும் தடாதகை, கோமளவல்லி, பாண்டியராஜகுமாரி, மாணிக்கவல்லி, சுந்தரவல்லி என்றெல்லாம் அழைக்கப்படுவது இந்த அன்னை மீனாட்சியே. மீன் போன்ற கண்கள் உடையவள் என்பதால் மீனாட்சி. மீன் முட்டையிட்டு தனது பார்வையாலேயே அடை காத்து குஞ்சை பொரிக்க வைத்துவிடுமாம், அதுபோல அன்னை மீனாட்சி தன் அருள் கண்களாலேயே பக்தர்களை காக்கிறாள்
சொக்கன் சந்நிதி:
சுவாமி சந்நிதியில் கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் சிவலிஙகத் திருமேனியாக அருட்காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கமாகும்.
திருச்சிற்றம்பலம்
Subscribe to:
Posts (Atom)